மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Filed under: தமிழகம் |

வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அரக்கோணத்தில் நடந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரக்கோணம் அருகே அசநெல்லிக்குப்பம் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, வயல்வெளியில் பன்றிக்காக மின்வேலியில் சிக்கி வயல்வேலி உரிமையாளர் வரதன் கைது செய்யப்பட்டுள்ளார். அரக்கோணம் அருகே வயல்வெளியை பன்றிகள் நாசம் செய்து வருவதால், அதனிடமிருந்து விவசாய விளைபொருட்களையும், நிலங்களையும் பாதுகாக்கும் நோக்கி, விவசாயிகள் மின்வேலி அமைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த வேலியில் இரவு நேரத்தில் மின்சாரம் பாய்ச்சப்படும். அரக்கோணம் அருகே, அசநெல்லிக்குப்பம், பகுதியில் பன்றிக்களுக்காக மின்வேலி அமைககப்பட்டிருந்தது. அப்பகுதியில் சுற்றுலா நடைபெற்று வரும் நிலையில், கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு, காட்டுப்பாதை வழியே வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கல்லூரி மாணவர் (19) ஒருவர் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கிப் பலியானார். இதுகுறித்து, நிலஉரிமையாளார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை போலீசார் கைது விசாரணை செய்து வருகின்றனர்.