மீண்டும் ஒரு காமெடி நடிகர் மரணம்!

Filed under: சினிமா |

கடந்த 2007ம் ஆண்டு தமிழ் சினிமாவின் மாபெரும் ஹிட் திரைப்படங்களில் ஒன்றான “பருத்திவீரன்” வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் தான் நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். படத்தில் பிரியா மணி, சரவணன், பொன்வண்ணன், சுஜாதா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

இத்திரைப்படத்தில் “பொணம் திண்ணி” என்ற கதாபாத்திரத்தில் நடித்து தன் கரகரப்பான குரலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் “செவ்வாழை ராஜூ”. அப்படத்தில் கார்த்திக்கு சித்தப்பாவாக நடித்து பிரபலமானார். அதற்கு முன்னர் “கிழக்குச் சீமையிலே” படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகமானவர். தொடர்ந்து பலவேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறுதி சடங்கு வருசநாடு அருகே உள்ள கோரையூத்து கிராமத்தில் நடைபெறும் என்று தகவல் கிடைத்துள்ளது.