மீண்டும் படையப்பா – நீலாம்பரி! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Filed under: சினிமா |

இயக்குனர் நெல்சனின் அடுத்த படத்தின் நடிகர் மற்றும் நடிகைகள் பற்றிய சுவாரஸ்யங்கள் கசிந்துள்ளது.

 

“பீஸ்ட்” திரைப்படத்தின் ரிலீசுக்குப்பிறகு இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் அவர் அடுத்து இயக்கவுள்ள ரஜினி படத்தில் மாற்றங்கள் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 


இதுபற்றி ரஜினியிடம் பேசியுள்ளதாகவும் இயக்குனரை மாற்றலாமா என அவரிடமே கேட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக ரஜினி காத்திருக்கும் நிலையில் தோல்விப்படம் தந்த நெல்சனையே இயக்க சொல்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நெல்சன் ரஜினி கூட்டணி உறுதியாகி உள்ளது.

 

இத்திரைப்படத்தில் ரஜினியுடன் நடிக்கப் போகும் நடிகர்கள் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் பிரியங்கா மோகன், ஐஸ்வர்யா ராய் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவர் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான “படையப்பா” திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதன் பின்னர் “பாபா” திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது 23 வருடங்களுக்கு பிறகு மறுபடியும் ரஜினியுடன் ஜோடி நடிக்க இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு பலமாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.