முதலமைச்சருக்கு பறந்ததா உளவுத்துறை ரிப்போர்ட்?

Filed under: அரசியல்,தமிழகம் |

உளவுத்துறை தமிழகத்திலுள்ள 8 தொகுதிகள் திமுகவுக்கு சாதகமாக இல்லை என்று தமிழக முதலமைச்சருக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். இதையடுத்து முதலமைச்சர் சுதாரித்து அந்த தொகுதிகளுக்கு கூடுதலாக சில அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுக கூட்டணி தான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினாலும் உளவுத்துறை முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள ரகசிய ரிப்போர்ட்டில் ஈரோடு, தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய எட்டு தொகுதிகளில் சுதாரிக்க வில்லை என்றால் அந்த தொகுதிகள் கையை விட்டு போய்விடும் என அறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. தேனி, தர்மபுரி, கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் மக்கள் அதிருப்தி மற்றும் உள்ளூர் திமுக கோஷ்டிகள் காரணமாகவும் திருநெல்வேலியில் பாஜக வேகமாக பிரச்சாரம் செய்வதாகவும் அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து எட்டு தொகுதிகளுக்கும் கூடுதலாக சில அமைச்சர்களை நியமித்த முதலமைச்சர் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் அறிவாலயம் பக்கமே வரக்கூடாது என்று நிபந்தனை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த சில நாட்களில் மேற்கண்ட 8 தொகுதிகளில் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.