முதல் முறை இணைந்து நடிக்கும் பிரபல நடிகைகள்!

Filed under: சினிமா |

இயக்குனர் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் பெரியதாக வசூல் செய்யவில்லை.

மணிரத்னம் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்தை இயக்கவுள்ளார். “நாயகன்” படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை மற்றும் புரமோஷன் வீடியோ ஷூட்டிங் சமீபத்தில் நடந்தது. அடுத்தாண்டு ஷூட்டிங் தொடங்க உள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் திரிஷா ஆகிய இருவரும் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் திரைப்படமாக இப்படம் அமையும்.