முல்லை பெரியாறு அணையில் மத்திய குழு ஆய்வு (மானிட்டரி கமிட்டி)

Filed under: தமிழகம் |

முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் தரப்பு முடிவு.

முல்லை பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவில் தமிழகம் மற்றும் கேரளா தரப்பில் தலா ஒரு தொழில்நுட்ப வல்லுநர்கள் சேர்க்கப்பட்ட பிறகு முதல்முறையாக 9.5.2012 அன்று அணைப்பகுதியில் ஆய்வு நடைபெற்றது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்கும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பெரியாறு அணையைக் கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் நாதன் தலைமையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

 

தற்போது இந்தக் குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத் தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். தமிழக பிரதிநிதியாக பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கேரள மாநிலம் சார்பில், அம்மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே.ஜோஸ் ஆகியோர் உள்ளனர்.

கடைசியாக இந்தக் குழுவினர் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் அணைப்பகுதியில் துணை கண்காணிப்பு குழுவினர் மட்டுமே ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கண்காணிப்பு குழுவில் இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்களையும் சேர்க்க வேண்டும் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, கண்காணிப்புக் குழுவில் இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்களையும் சேர்க்க அறிவுறுத்தியது.

 

இதையடுத்து தமிழகம் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் சுப்பிரமணியம்,கேரளா சார்பில் அம்மாநில நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீசும் சேர்க்கப்பட்டனர்.

தொழில்நுட்பக் குழுவினர் சேர்க்கப்பட்ட பிறகு முதல்முறையாக இந்தக் கண்காணிப்பு குழு 9.5.2022 திங்கட்கிழமை முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தது

.இதில் வல்லக்கடவு வழியாக அழைத்துச் செல்லும் பாதையை அமைப்பது, பேபி அணையை பலப்படுத்த இடையூறாக இருக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடைபெற்ற துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வுக்குப் பின் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,

அணைப்பகுதியில் மராமத்து பணிகள் செய்ய விடாமல் தடுக்கும் கேரள அரசை கண்டித்து தமிழகப் பிரதிநிதிகள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.