திருச்சி தெற்குமாவட்ட திமுக சார்பில்நலத்திட்ட உதவிகள்.

Filed under: தமிழகம் |

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி திருச்சி தெற்குமாவட்ட திமுக சார்பில்நலத்திட்ட உதவிகள்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் நாளை (மார்ச் 1 – ந் தேதி) திமுகதலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள், மரம் நடுதல், இரத்தம் தானம் செய்தல் கழக கொடி ஏற்றுதல் என பொது மக்களுக்கு பயன்படும் வகையில் மாதம் முழுவதும் எழுச்சியாக கொண்ட வேண்டும் .

மேலும் பகுதி, ஒன்றிய, நகர,பேரூர் கழகங்களில் கழக இருவண்ண கொடியேற்றியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பின்னர் மாவட்ட கழகத்தால் அறிவிக்கப்பட்ட, தேர்தல் பார்வையாளர்கள் அனைத்து வட்ட, வார்டு, ஊராட்சிகளிலும் கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்கிட ஏதுவாக மேற்க்கண்டபடி நிகழ்ச்சி ஏற்பாடுகளை அந்தந்த பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயளாலர்கள் ஒப்புதலுடன் வட்ட, வார்டு, கிளை கழக செயளாலர்கள் நிகழ்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திட வேண்டுமாய் கேட்டுகொள்கின்றேன் .

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.