‘மௌன ராகம்’ சந்திரமௌலி கேரக்டரில் நடித்தவர்!

Filed under: சினிமா |

பழம்பெரும் நடிகரான ரா. சங்கரன் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவை அடுத்து திரை தமிழ் திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ரா சங்கரன் கடந்த 1931ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார். கடந்த 1974ம் ஆண்டு “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணே” என்ற படத்தில் அறிமுகமானவர், “தேன் சிந்துதே வானம்,” “தூண்டில் மீன்,” “ஆடிப்பெருக்கு,” “ஒரு கைதியின் டைரி,” “பகல் நிலவு,” “உனக்காகவே வாழ்கிறேன்,” “கடமை கண்ணியம் கட்டுப்பாடு,” “அமரன்,” “சின்ன கவுண்டர்” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான “மௌனராகம்” திரைப்படத்தில் ரேவதி தந்தையான சந்திரமௌலி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் அவர் “தேன் சிந்துதே வானம்” உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். வயது முதிர்வு காரணமாக இன்று நடிகர் ரா. சங்கரன் காலமானதையடுத்து ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.