ராகவா லாரன்ஸின் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

Filed under: சினிமா |

நடிகர் ராகவா ராலன்ஸின் “ருத்ரன்” திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

நடிகர், மற்றும் நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் முதலில் அறிவிக்கப்பட்டது. ‘ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட படத்தை திடீரென தயாரிப்பாளர் கதிரேசனே இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து சென்னை மற்றும் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு சில கட்டங்களாக நடந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக படத்தின் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் இப்போது கடைசி கட்ட காட்சிகள் சென்னை பெரும்பாக்கத்தில் படமாக்கப்பட்டு வந்தது. இப்போது மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஷூட் நிறைவடைந்துள்ள நிலையில் படம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது,