வானிலை மையம் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, தெற்கு ஆந்திராவில் பகுதியாக வலுவிழந்துள்ளது. எனவே, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால், இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில், காற்று பலமாக வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
Related posts:
வீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும் - பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன்!
ஜெயலலிதா பிறந்தநாளை அன்னதானம்- நலத்திட்ட உதவிகள் மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி வழங்கினார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு.
ஜூன் மாதம் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு!



