விமானப்படையின் திடீர் முடிவு!

Filed under: இந்தியா |

இந்திய விமானப்படை பயன்படுத்தப்பட்டு வரும் மிக் 21 ரக போர் விமானங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய விமானப்படையில் பல்வேறு ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பிரபலமான ஒன்று மிக் 21 ரக போர் விமானங்கள். சோவியத் காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மிக்21 ரக போர் விமானங்கள் கடந்த 1960ம் ஆண்டு தொடங்கி இன்று வரை இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த சில காலமாக இந்த மிக் 21 ரக போர் விமானங்கள் விபத்துகளை சந்திப்பது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் ராஜஸ்தானில் மிக் 21 ரக போர் விமானம் விழுந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். மிக் 21 ரக போர் விமானங்களின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க விமானப்படை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மிக் 21 ரக போர் விமானங்களின் பாதுகாப்பு பரிசோதனை முழுவதுமாக செய்யப்பட்டு பின்னர் அவற்றை மீண்டும் இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.