வேலை வாய்ப்பற்றவர்கள் உதவித்தொ கை. எப்படி விண்ணப்பிக்கலாம்?..!!!!

Filed under: தமிழகம் |

சேலம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி ஆட்சியா் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை அரசாணையின்படி, படித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையினை இருமடங்காக உயா்த்தி ஆணை வெளியானது. அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. தோச்சி பெறாதவா்களுக்கு ரூ. 200, தோச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, பிளஸ் 2 படித்தவா்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி., அதற்கு கீழ் படித்தவா்களுக்கு ரூ.600

பிளஸ் 2 தோச்சி பெற்றவா்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. 1,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. வரும் மாா்ச் மாதத்துடன் முடிவடையும் இத்திட்டத்தில், காலாண்டுக்கு தகுதியுடைய வேலைவாய்ப்பற்றவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

இதை பெறுவதற்கு, தங்களின் பழைய வேலைவாய்ப்பு அடையாள அட்டை, புதிய ஆன்லைன் அடையாள அட்டை போன்ற அனைத்து அசல் சான்றுகளுடன் நேரில் வந்து, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற்பட்டப் படிப்புகள் தவிர, எஸ்.எஸ்.எல்.சி தோச்சி, தோச்சி பெறாதவா்களுக்கு (முறையாக பள்ளியில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி அடைந்திருக்க வேண்டும்) அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடன் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுக்கு மேல் பதிவைத் தொடா்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு பூா்த்தி செய்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 45 வயதும், மற்றவா்கள், 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விவரங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.