அன்புமணி ராமதாஸின் கோரிக்கை!

Filed under: அரசியல்,தமிழகம் |

அன்புமணி ராமதாஸ் 5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பள்ளித் தாளாளரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகராட்சியில் 30வது வார்டு திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அப்பள்ளியின் தாளாளராக இருந்து வருகிறார். பக்கிரி சாமி தனது பள்ளியில் படித்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இப்புகாரை அடுத்து காவல்துறையினர் திமுக 30-வது வார்டு கவுன்சிலர் பக்கிரி சாமியை கைது செய்தனர். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டரில், “5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்த விவகாரத்தில் பள்ளித் தாளாளரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.