ஆன்லைன் ரம்மியால் ஒரே குடும்பத்தினர் தற்கொலை முயற்சி!

Filed under: தமிழகம் |

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூபாய் 20 லட்சத்துக்கு மேல் இழந்ததையடுத்து குடும்பத்துடன் 3 பேர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் தனியார் லாட்ஜ் ஒன்றில் குடும்பத்துடன் தங்கிய அந்த நபர் தனது மனைவிக்கும் குழந்தைக்கும் விஷம் கொடுத்து அதன் பின் விஷமருந்தியதாக தெரிகிறது. இந்நிலையில் மயங்கிய நிலையில் இருந்த கணவன் மனைவி மற்றும் குழந்தை ஆகிய 3 பேரையும் மீட்டு லாட்ஜ் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது. தற்போது மூன்று பேரும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் ரம்மி காரணமாக ஏற்கனவே பல உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் தற்போது குடும்பத்துடன் 3 பேர் தற்கொலை முயற்சி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.