உதயநிதியை விமர்சித்த ஜெயக்குமார்!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட சென்று வந்தார். இது குறித்து அவர் முதலமைச்சரிடம் விளக்கியதாக தகவல் வெளியானது.

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதி ஸ்டாலினின் ஒடிசா பயணத்தை சுற்றுலா சென்று வந்ததாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, “ஒரு துயர சம்பவத்திற்கு செல்லும் போது யாராவது கூலிங் கிளாஸ் போட்டு வருவார்களா? சூட்டிங் சென்ற மாதிரி அவர் ஒடிசாவுக்கு சென்று வந்துள்ளார். ஒடிசா சென்றவர்கள் சம்பவம் இடத்திற்கு செல்லவே இல்லை. பிரதமர் வருகையால் உதயநிதியை அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளது ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு முதலமைச்சரின் மகன் ஒரு மாநிலத்தின் அமைச்சரை தடுக்க யாராலும் முடியாது, இந்த பொய்யை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணம் செய்தவர்களின் உயிரிழந்தவர்களில் பலர் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. அவர்களில் யாராவது தமிழர்கள் இருந்தார்களா என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவில்லை” என்று அவர் தெரிவித்தார்.