பாண்டிய வாரிசுகளின் எச்சரிக்கை போஸ்டர்!

Filed under: சினிமா,தமிழகம் |

மதுரையில் “பொன்னியின் செல்வன்” படம் வெளியாகியுள்ள திரையரங்கில் பாண்டிய வாரிசுகள் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

இன்று மணிரத்னத்தின் இயக்கத்தில் பல நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படம் ரிலீசாவதற்கு முன்பாகவே பெரும்பான்மையாக டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. இன்று காலை காலை முதலே திரைப்படத்திற்கான வரவேற்பும் பலமாகவே உள்ளது என்று கூறலாம். பாண்டிய மன்னனான முதலாம் வீரபாண்டியனின் தலையை வெட்டிக் கொன்ற சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனை பழிதீர்க்க பாண்டிய ஆபத்துதவிகள் சபதம் எடுப்பது பொன்னியின் செல்வன் கதையின் முக்கியமான பகுதியாகும். மதுரை பாண்டியர்கள் ஆண்ட பகுதி என்பதால் அங்கு பொன்னியின் செல்வன் வெளியாகியுள்ள அதே சமயம் பாண்டியர்கள் ரசிகர்களிடம் இதுகுறித்த வரலாற்று மோதலும் உள்ளது. இந்நிலையில் மதுரையில் பொன்னியின் செல்வன் வெளியாகியுள்ள நிலையில் அங்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது. அதில் “சோழர்களே.. பாண்டிய நாட்டுக்கு வந்தோமா.. படத்தை பாத்தோமான்னு இருக்கணும். ஏதாவது எசக்குபிசகாக பண்ண நினைத்தால் அவ்வளவுதான்” என வாசகம் இடம் பெற்றுள்ளதுடன் கீழே “பகை மறவா பாண்டியரின் வாரிசுகள்” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. பாண்டிய மன்னன் வீரபாண்டியனை ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஆதித்த கரிகாலன் கொன்றதை இன்றும் நினைவுப்படுத்தும் விதமாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.