உதவி எண்கள் அறிவித்தது மாநகராட்சி!

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை மாநகராட்சி நேற்றிரவு முதல் சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதால், மழை நீர் தேங்குவது தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவிக்கும் போது #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹாஷ்டாக் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட சேதங்களை சேதங்களை சரிப்படுத்த மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. சென்னை மாநகராட்சி புகார் எண்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி 044 2561 9206, 044 2561 9207 மற்றும் 044 2561 9208 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என்றும் மேலும் இலவச உதவி எண் 1913 என்ற எண்ணையும் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்க 9445477205 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.