உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

Filed under: இந்தியா |

உலக சுகாதார அமைப்பு நீண்டதூரம் பயணம் செய்வோருக்கு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவித்துள்ளது.

சீனாவிலிருந்து கடந்த 2020ம் ஆண்டு கொரொனா தொற்று உலக நாடுகளுக்குப் பரவியது. பல கோடிக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டில் கொரொனா தொற்று நோய் ஓரளவுவுக்கு குறைந்தது. ஆண்டிறுதியில் மீண்டும் பரவத் தொடங்கியது. குறிப்பாக சீனாவில் இ பிஎஃப்-7 என்ற உருமாறிய கொரோனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பரவி வருகிறது. அமெரிக்காவில் கடந்த 7ம் தேதி வரை 27.6% மக்கள் கொரொனாவில் எக்ஸ்பிபி 1.5 என்ற உருமாறிய வைரஸால் பாதித்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அண்டை நாடுகள், மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இத்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரொனா பாதிப்புகள் அதிகமுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மற்றும் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.