ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் மூடப்படும்!

Filed under: சென்னை |

சென்னை மாவட்ட கலெக்டர் ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் மற்றும் பார்கள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 4ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சற்று முன் அறிவித்துள்ளார். அன்றைய தினம் விதிகளை முறையை மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் நிலையில் இவ்வாண்டும் அதே போல் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.