பள்ளி மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

Filed under: இந்தியா |

பள்ளி மாணவிகள் தோப்புகரணம் போட்டதால் மயங்கி விழுந்த சம்பவம் ஒடிஷா மாநிலம் போலங்கிர் மாவட்டத்தில் உள்ள பட் நகர் பகுதியில் பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் நடந்துள்ளது.

இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் நேற்று பள்ளிக்குத் தாமமதமாக வனந்தனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர் 7 மாணவிகளையும் அழைத்து தாமதமாக வந்ததற்கு 100 தோப்புக்கரணம் போடுமாறு கூறியிருக்கிறார். அந்த மாணவிகளால் தோப்புக் கரணம் போடமுடியவில்லை, ஒரு கட்டத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் 7 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது அவர்களின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் கூறுகிறது. மாணவிகளுக்கு தண்டனை அளித்தது குறித்து விசாரணை நடத்த ஒடிஷா மாநில கல்வி மந்திரி சமீர் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.