ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: டெல்லியை பந்தாடிய கொல்கத்தா

Filed under: விளையாட்டு |

துபாய், செப் 29:
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையிலான போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்டில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. இதன் 41வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து, 128 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரானா 36 ரன்கள் எடுத்தார் என்பதும், சுனில் நரேன் 10 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சுனில் நரேன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடித்து வருகிறது. அதேபோல், டெல்லி அணி இன்றைய போட்டியில் தோல்வி அடைந்ததால், முதல் இடத்தில் சென்னை அணி, தொடர்ந்து நீடித்து வருகிறது.