கவிபேரரசுக்கு மலேசியாவில் சிறப்பான வரவேற்பு!

Filed under: தமிழகம் |

மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி சாதனை படைத்த ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ இந்த விருதை இணைந்து வழங்குகிறது.

மலேசியாவில் இந்த விருது வழங்கும் விழா டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ எம்.சரவணன் முன்னிலையில் வழங்கப்படுகிறது. இவ்விருதினைப் பெற்றுக் கொள்ள மலேசியா வந்தடைந்தார் கவிப்பேரரசு வைரமுத்து மலேசியா வந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு ‘டத்தோ’ எம்.சரவணன் தலைமையில் விமான நிலையம் முதல் தங்கி இருக்கும் விடுதி வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.