குழந்தைகள் ஜாக்கிரதை!

Filed under: தமிழகம் |

கொரோனா நோயின் அறிகுறி குழந்தைகளுக்கு 2 மாதங்கள் வரை நீடிக்கும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்றின் அறிகுறிகள் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சில மாதங்களாகவே 3 லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கி உள்ளது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது அதிகரித்து உள்ளது. ஒரு நாளின் பாதிப்பு பத்து அயிரத்திற்கும் அதிகமாக இருக்கிறது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொற்றின் அறிகுறிகள் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 3 வயது வரை உள்ள குழந்தைகளில் 40 சதவீதம் பேர் 2 மாதங்களுக்கும் மேலாக நோயின் அறிகுறிகளை அனுபவித்துள்ளனர். 4 முதல் 11 வயதுக்குட்பட்டவர்களில் 38 சதவீதம் பேரும், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 41 சதவீதம் பேரும் நீண்ட காலமாக நோயின் அறிகுறியை அனுபவித்துள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.