கோயம்பேட்டில் பற்றி எரிந்த சொகுசு கார்!

Filed under: சென்னை |

சொகுசு கார் ஒன்று சென்னை கோயம்பேடு அருகே திடீரென பற்றி எரிந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து சென்ட்ரல் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென கோயம்பேடு மேம்பாலத்தில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காரின் டிரைவர் உடனடியாக காரை நிறுத்தி தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் கார் முழுவதிலும் தீ பரவியது. இதுகுறித்து தகவலறிந்த அண்ணாநகர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் காரில் இருந்த அனைத்து பாகங்களும் தீயில் எரிந்து சாம்பலானதோடு சில பாகங்கள் வெடித்து சிதறியது. இதன் காரணமாக கோயம்பேடு சென்ட்ரல் செல்லக்கூடிய சாலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.