கோவில்களின் கட்டிடங்கள் காணொலி மூலம் திறப்பு!

Filed under: அரசியல் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டிமுடிக்கப்பட்ட திருக்கோவில்களில் பல்வேறு கட்டிடங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோவில்களில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை காணொளி கட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.104.77 கோடி மதிப்பீட்டில் 18 திருக்கோவில்களில் திருமண மண்டபங்கள், பக்தர்கள் தாங்கும் விடுதி, விருந்து மண்டபம், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இதே போல அன்னதான கூடம், முடி காணிக்கை மண்டபம், காதுகுத்து மண்டபம், வணிக வளாகங்களும் கட்டப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பாக மேற்கொண்டு வரக்கூடிய நிலையில் திருக்கோவில்களில் பள்ளி கல்லூரி கூடல் வகுப்பறை கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளது. கலையரங்கம், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவையும், மண்டல அலுவலகங்கள், ஓதுவார் பயிற்சி பள்ளிகள் போன்ற 25 புதிய கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி கட்சி மூலம் திறந்து வைத்தார்.