கோவையில் களமிறங்கிய சபரீசன்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அண்ணாமலை கோவை தொகுதியில் ஜெயித்து விடக்கூடாது என்பதற்காக சபரிசன் களம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவரை தோற்கடிக்க திமுக மற்றும் அதிமுக இணைந்து செயல்படுவதாக கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் பாஜக தொண்டர்கள் கோவை தொகுதி முழுவதும் துண்டு நோட்டீசுகளை கொடுத்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த அளவுக்கு திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் இல்லை என்றும் கூறப்படுகிறது. கோவை தொகுதியில் திமுக தேர்தல் பொறுப்பாளர்களாக ஏற்கனவே அமைச்சர் சக்கரபாணி உள்ளார். தற்போது கூடுதலாக பூச்சி முருகன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி டிஆர்பி ராஜாவையும் பொறுப்பாளராக அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் திமுகவினர் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டி வருவதால் களத்தில் தற்போது சபரீசன் இறங்கி இருப்பதாகவும் இதையடுத்து திமுக தொண்டர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. எப்படியும் அண்ணாமலையை ஜெயிக்க விடக்கூடாது என்று திமுக தீவிரமாக கோவையில் பிரச்சாரம் செய்து வருகிறது.