சடலமாக மிதந்த சிறுவனின் உடல்!

Filed under: தமிழகம் |

ஈரோடு மாவட்டத்தின் அருகே உள்ள வாய்க்காலில் சிறுவனின் உடல் சடலமாக மிதந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள உக்கரம் குப்பன்துறை என்ற பகுதியில் கீழ்பவானில் வாய்க்காலில் ஒரு சிறுவன் உடல் மிதந்து வருவதை அங்குள்ள மக்கள் பார்த்தனர்.இதுகுறித்து கடத்தூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ள நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு முதலுதவி செய்ய முயன்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக போலீசார் கூறியுள்ளனர். இறந்த சிறுவன் பற்றியும் அவர் எப்படி வாய்க்காலில் சடலமாக மிதந்தார் என்பது பற்றியும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.