சென்னையில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Filed under: சென்னை |

சென்னை கல்லூரி மாணவர்கள் பாலியல் அத்துமீறலில் கல்லூரி முதல்வருக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.

கல்லூரி முதல்வர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் கல்லூரி கட்டணத் தொகையை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நந்தனம் ஒ.எம்.சி.ஏ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளதாகவும் இதனால் நந்தனம் கல்லூரியின் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையில் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.