சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை உயர்நீதிமன்றம் டிரோன்கள் உயர்நீதிமன்றத்தின் மீது பறக்கக் கூடாது என்றும் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் செயல்படும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதோடு சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள் பொது நிகழ்ச்சிக்காக உயர் நீதிமன்றத்தை டிரோன் கேமராமூலம் படம் எடுத்ததாக புகாரளிக்கப்பட்டது. படம் எடுத்தவர்கள் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.