சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Filed under: சென்னை |

தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வு குறித்த அரசாணையை பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமீபத்தில் சென்னை கோவை நகராட்சிகளில் சொத்துவரி அதிகமாக உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சென்னை கோவை மாநகராட்சி சொத்து வரி உயர்வை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. தற்போது வந்த தகவலின் படி சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சென்னை போன்ற மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.