விஜயகாந்த் மறைவையொட்டி நாளை படப்பிடிப்பு ரத்து!

Filed under: அரசியல்,சினிமா,சென்னை |

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். அவ்வப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதங்களில் அவர் உடல்நிலை சீராக இல்லை.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சு திணறல பிரச்சனை இருப்பதால் வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு சக திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சங்கத் தலைவராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ள விஜயகாந்தின் மறைவையொட்டி நாளை ஒருநாள் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.