சென்னை தனியார் பள்ளிக்கு மீண்டும் குண்டு மிரட்டல்!

Filed under: சென்னை |

சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது மீண்டும் சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று முதுல் 12ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியுள்ளது. இன்று முதல் 11-ம் வகுப்புகளுக்கும் தொடங்க உள்ளது. சென்னை கெருகம்பாக்கதில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்கள் பள்ளிகள் குவிந்ததால் பதட்ட நிலை ஏற்பட்டது. பள்ளியில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு பள்ளியில் தீவிர சோதனை நடந்தது. இதுவரை எந்த விதமான வெடி பொருள்களும் கைப்பற்றப்படவில்லை என்பதால் இதுவும் ஒரு வதந்தியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பள்ளியில் வெடிகுண்டு வைப்பதாக கடந்த 1ம் தேதி மின்னஞ்சல் மூலம் செய்தி வந்ததையடுத்து தற்போது தான் அந்த மின்னஞ்சல் பார்க்கப்பட்டதாகவும் இதையடுத்த உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.