ஜோடி சேர்ந்து 12 மாவட்டங்களில் கொள்ளை!

Filed under: தமிழகம் |

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று தம்பதிகள் கூட்டாக சேர்ந்து 12 மாவட்டங்களில் அடுத்தடுத்து கொள்ளை அடித்ததால் ஈரோட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அடுத்தடுத்து தொடர் கொள்ளைகள் நடந்து வருவதை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இதில் தெலுங்கானா மாநிலம் வாராங்கலைச் சேர்ந்த சூர்யா- பாரதி, மணி -மீனா, விஜய் லட்சுமி ஆகிய 3 தம்பதியினர் இந்த கொள்ளை சம்பவத்தை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவர்களிடமிருந்து 40 பவுன் தங்கம் மற்றும் 70 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.