டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன்களிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
![](https://netrikkan.com/wp-content/uploads/2023/02/TIK-TOK.jpg)
ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்த எவ்வித தடையும் கிடையாது. இந்நிலையில் அமெரிக்காவை அடுத்து கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக் டாக் செயல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடா அரசு விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்க அரசு அலுவலங்களில் இந்த டிக் டாக் செயலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கனடாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் முழுமையாக டிக்டாக் செயலிக்கு தடை போடப்பட்டுள்ளது. இதனால் டிக் டாக் செயலிக்கு பெரும் வருவாய் குறைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.