திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Filed under: அரசியல்,தமிழகம் |

நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக பிரமுகர் சாமிநாதன் வீட்டில் சோதனை செய்ததோடு அவரது வீட்டில் இருந்து ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை செய்தது. சோதனை தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் சாமிநாதன் தோட்டத்து பங்களாவில் சில ஆவணங்கள் கிடைத்ததாகவும் அந்த ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் அள்ளிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. திமுக பிரமுகர். சாமிநாதன் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. அதனால்தான் சாமிநாதனை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை செய்துள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.