தெற்கு ரயில்வே கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் பற்றி அறிவிப்பு!

Filed under: Uncategory |

தெற்கு ரயில்வே தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு வரும் 21ம் தேதி வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை இருப்பதால் பலரும் சென்னையிலிருந்து சொந்த ஊர் புறப்பட்டனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக போக்குவரத்துத் துறை 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது. இந்த சிறப்பு பேருந்துகளில் 1.65 லட்சம் பேர் பயணித்துள்ளதாக கூறியுள்ள போக்குவரத்துத்துறை திரும்ப வருவதற்கு 17ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 21ம் தேதி வரை கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சொந்த ஊருக்கு சென்ற மக்கள் பணி செய்யும் நகரங்களுக்கு திருப்ப ஏதுவாக கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.