தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் மருத்துவமனையில் அனுமதி!

Filed under: அரசியல்,தமிழகம் |

தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீதமுள்ள உணவை சாப்பிட்ட 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேமுதிக ஆர்ப்பாட்டம் சமீபத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தக்காளி சாதம் வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள உணவை அப்பகுதி மக்கள் சாப்பிட்டனர். இந்த உணவை முத்துகிருஷ்ணாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி வழங்கியதாக தெரிகிறது. மீதமிருந்த தக்காளி சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் வந்தது. அதையடுத்து 25 பேர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.