ஸ்வதேஸ் திட்டம் – வெளிநாடுகளில் வேலை இழந்தவர்களுக்கு மத்திய அரசு வாய்ப்பு!

Filed under: அரசியல்,இந்தியா |

ஸ்வதேஸ் திட்டம் – வெளிநாடுகளில் வேலை இழந்தவர்களுக்கு மத்திய அரசு வாய்ப்பு!

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு ஸ்வதேஸ் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் கோடிக்கணக்கானவர்கள் உலகம் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதனால்  வெளிநாடுகளில் தங்கி இருந்தவர்கள் தாய்நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அந்தவகையில் வெளிநாடுகளில் வேலைப் பார்த்து வந்த இந்தியர் பலரும் தங்கள் வேலைகளை இழந்து தாயகம்  திரும்பியுள்ளனர். இதுவரை கிட்டதட்ட அரபு நாடுகளில் இருந்து மட்டும் 80,000 பேர் நாடு திரும்பியுள்ளனர். அதே போல சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கானவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

ஸ்வதேஸ் என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் www.nsdcindia.org/swades என்ற இணையதளத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், தங்கள் விவரங்களை பதிவேற்றலாம். இதில் இருக்கும் படிவத்தில் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.