தேர்வு பற்றிய புதிய ததவலை அளித்த அமைச்சர்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு வருடத்தில் 3 நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்திருந்தால் கூட தேர்வு எழுதலாம் என்று தெரிவித்துள்ளார்.

11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் முதல் தாளில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் “ஆண்டிற்கு மூன்று நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்திருந்தாலும் அவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். பள்ளிகளுக்கு குறைந்த பட்ச வருகை பதிவு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்ற நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று நாள் பள்ளிகளுக்கு வந்தாலே கூட ஹால் டிக்கெட் வழங்கப்படும். மாணவர்களை தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று தான் முயற்சி செய்கிறோம்” என்று கூறினார்.