நடிகர் சரத்பாபு காலமானார்!

Filed under: சினிமா |

நடிகர் சரத்பாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானதாக அறிவிக்கப்பட்டது. இன்று அவர் உண்மையிலேயே காலமானார் என்ற தகவல் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே நடிகர் சரத்பாபு உடல்நல கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நலம் தேறிக் கொண்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். திடீரென அவர் காலமானதாக சில நாட்களுக்கு முன் வதந்தி கிளம்பியது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் இது குறித்து விளக்கமளித்தனர். தற்போது அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சரத்பாபுவின் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “பட்டினப்பிரவேசம்,” “நிழல் நிஜமாகிறது,” “முள்ளும் மலரும்” உள்ளிட்ட பல திரைப்படங்களில் சரத் பாபு நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 200 படங்களுக்கும் மேல் அவர் நடித்துள்ளார்.