நடிகைகளை பயன்படுத்திய பாகிஸ்தான்!

Filed under: உலகம் |

முன்னாள் ராணுவ மேஜர் பாகிஸ்தான் உளவு அமைப்பு முதல் ரகசிய உறவு வரை பிரபல நடிகைகளை உளவாளிகளாக பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தில் முன்னர் மேஜராக பணியாற்றிய அடில் ராஜா யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் சமீபத்தில் பேசியவர் பாகிஸ்தானில் உள்ள பிரபல நடிகைகள் மற்றும் மாடல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு உளவாளிகளாக பயன்படுத்தியதாக கூறியுள்ளார். குறிப்பிட்டு யார் பெயரையும் சொல்லாத அவர் அந்த நடிகைகளை கொண்டு சந்தேகத்திற்குரியவர்களுடன் நெருங்கி பழக செய்து உளவு வேலை பார்த்ததாக கூறியுள்ளார். சமீபத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பு தயாரித்து வெளியிட்ட நாடகங்களில் நடித்திருந்த நடிகைகள்தான் அடில் ராஜா சொன்ன நடிகைகள் என சமூக வலைதளங்கள் தகவல் பரவி சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அவரது இக்கருத்து குறித்து கண்டனம் தெரிவித்துள்ள சஜல் அலி என்ற நடிகை “நமது நாட்டின் தரம் குறைந்திருப்பது வருத்தத்திற்குரியதும், அருவருக்கத்தக்கதுமாகும். ஒருவரின் தனி பண்பு நலனை படுகொலை செய்வது பெரும் பாவத்திற்குரியது” என பேசியுள்ளார். முன்னாள் ராணுவ மேஜரான அடில் ராஜா, முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர் என்பதால் புதிய அரசாங்கம் குறித்த அவதூறான கருத்துகளை பரப்பி வருவதாகவும் பலர் கூறி வருகின்றனர்.