ஐஆர்எஸ் ஆர் அதிகாரி ஒருவர் குடியரசு தலைவருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பணியில் இருந்தபோது கடிதம் எழுதினார். அவர் தற்போது சுயேட்சையாக வட சென்னை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் இந்த சம்பவத்தை குறிப்பிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி பாலமுருகன் என்பவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி பரப்பரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அவர் ஓய்வு பெறும் நாளில் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னை தொகுதியில் ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகன் சுயேசையாக போட்டியிட வேண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் தன்னை தேர்வு செய்து டில்லிக்கு அனுப்பினால் இத்தொகுதி மக்களுக்கு நல்லது செய்வேன் என்று அவர் கூறியுள்ளார்.