வானிலை மையம் குறித்து நிர்மலா சீதாராமன்!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வானிலை மையம் அதிநவீனமானது, உரிய வானிலை முன்னெச்சரிக்கையை முன்கூட்டியே வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

டில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியின்போது, “அதிகனமழை எச்சரிக்கையை 12ம் தேதியே வானிலை ஆய்வு மையம் வழங்கியது, ஒவ்வொரு 3 மணி நேரமும் மழை குறித்த எச்சரிக்கை வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது, வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து சுமார் 42,000 ராணுவ, கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர், தென்மாவட்ட வெள்ள பாதிப்பை மத்தியக் குழு உடனே ஆய்வு செய்துள்ளது” அவர் கூறியுள்ளார்.