நீட் வினாத்தாள் குறித்து மத்திய அமைச்சர் வேண்டுகோள்!

Filed under: இந்தியா,தமிழகம் |

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் “நீட் தேர்வு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம், மறுதேர்வு எழுதினால் அதன் மதிப்பெண்ணே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று 2வது முறையாக மத்திய கல்வி அமைச்சராக தனது அலுவலகத்தில் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்றுக் கொண்டார். பின் செய்தியாளர்களிடம், “நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நீதி வழங்குவதில் இந்திய அரசும், தேசிய ஜனநாயக கூட்டணியும் உறுதி பூண்டுள்ளது, நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏதும் நடக்கவில்லை. இதுவரை இதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. நீட் தேர்வில் குளறுபடிகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். நீட் தேர்வு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். மறுதேர்வு எழுதினால் அதன் மதிப்பெண்ணே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.