பச்சிளம் குழந்தைகளை கொன்று குவிக்கும் செவிலியர்!

Filed under: உலகம் |

செவிலியர் ஒருவர் இரக்கமின்றி 7 பச்சிளம் குழந்தைகளை சம்பவம் பிரிட்டன் நாட்டில் நடந்துள்ளது. இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த லூசி லெட்பி என்ற பெண் அங்குள்ள செஸ்டர் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த 2016ம் ஆண்டில் ஜூன் மற்றும் ஜூலை 2 மாதங்களுக்குள்ளாக அம்மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்றுள்ளார். கடந்த 2018ல் ஒரு குழந்தையை கொல்ல முயன்றபோது இவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மேலும் 15 குழந்தைகளை இவர் கொல்ல முயன்றது தெரிய வந்துள்ளது. குழந்தைகளுக்கு இன்சுலின் ஊசி போடுதல், வெற்று ஊசியில் காற்றை இழுத்து குழந்தைகளுக்கு செலுத்துதல் என பல வகையில் இவர் குழந்தைகளை கொன்றுள்ளார். இதுகுறித்து இவர் அளித்த வாக்குமூலத்தில் “நான் ஒரு பேய். நான்தான் குழந்தைகளை கொன்றேன். நான் வாழத் தகுதி அற்றவள்” என கூறியுள்ளார். குழந்தைகளை சரிவர பராமரிக்க முடியாததால் அவர்களை கொன்றதாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.