பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையை அறிவித்தது

Filed under: தமிழகம் |

பள்ளி கல்வித்துறை ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 14ம் தேதி முதல் கோடை விடுமுறை என அறிவித்துள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்றும் அன்று அரை நாள் மட்டும் தேர்வு எழுத பள்ளிக்கு இருந்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி முதல் கோடை விடுமுறை என்றும் விடுமுறைக்கு பின் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.