பாமகவை விமர்சித்த ஜெயக்குமார்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராமதாசுக்கு சீட் பேரம் தான் முக்கியம் என்று விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஜெயலலிதா இல்லை என்றால் பாமக வெளியே தெரிந்திருக்காது. எங்கள் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் பாமகவினர், பாமக தொண்டர்களே அதிமுகவுடன் கூட்டணி வைக்க தான் விரும்பினார்கள். பேரம் அதிகமாகும் இடத்தில் தான் ராமதாஸ் உடன்படுவாறே தவிர கொள்கையாவது, கூட்டணியாவது, வெங்காயமாவது, எதுவுமே அவருக்கு கிடையாது. பாமகவுக்கு அங்கீகாரம் கொடுத்தது, அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது அதிமுக தான். பாமகவால் தனியாக நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது” என்று ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார்.