பூமி தினத்தை ஒட்டி அன்னை பூமிக்கு பிரதமர் நன்றி

Filed under: இந்தியா |

புது டெல்லி, ஏப்ரல் 22

சர்வதேச பூமி தினத்தை ஒட்டி அன்னை பூமிக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நமக்கு அளவற்ற ஆரோக்கியமும்,  கருணையும் காட்டும் நம் அன்னை பூமிக்கு, சர்வதேச பூமி தினத்தை ஒட்டி, நாம் அனைவரும் நன்றி செலுத்துவோம். தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் அதிக வளமான பூமியை உருவாக்கப் பாடுபடுவதற்கு நாம் அனைவரும் உறுதியேற்போம்.

கோவிட்-19 நோய்த் தாக்குதலை முறியடிக்க முன்களத்தில் நின்று போராடும் அனைவருக்கும் உரத்த குரலில் நன்றி செலுத்துவோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.