போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

போக்குவரத்துத்துறை மூத்த குடிமகன்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள் வழங்குவது குறித்து அறிவித்துள்ளது.

டிசம்பர் 21ம் தேதி முதல் சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமகன்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்களை பெறலாம் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை அமைந்தது முதல் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், சென்னையில், 4 பணிமனை பேருந்து நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கு மாதம் 10 டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023 ஜனவரி முதல் ஜூன் வரை இலவச பேருந்து பயண டோக்கன் வரும் டிசம்பர் 21 முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் இதை, திருவான்மியூர், அடையாறு மந்தைவெளி, தி.நகர் மற்றும் சைதாப்பேட்டையில் இந்த டோக்கன்கள் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.