மத்திய சுகாதார அமைச்சகத்தின் புதிய தகவல்!

Filed under: இந்தியா |

மத்திய சுகாதார அமைச்சகம் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 124 பயணிகளுக்கு கொரொனா மற்றும் 40 புதிய வகை தொற்று உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவிலிருந்து கடந்த 2020ம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது. இதன் 5ம் அலை விரைவில் பரலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சீனாவில் தற்போது பிஎப்-7 என்ற கொரொனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருவதால் அங்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பிஎப்-7 ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில் வெளி நாடுகளிலிருந்து இந்தியா வந்த பயணிகளுக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா வரும் பயணிகளுக்கு கொரொனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை வெளி நாடுகளிலிருந்து இந்தியா வந்துள்ள 19,227 பயயணிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 124 பயணிகளுக்கு கொரொனா வைரஸ் பாதிப்பும், 40 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது. இதில், 14 பேருக்கு எக்ஸ்பிபி வகையும், பிகியூ வகை கொரொனா 9 பேருக்கும், பி.ஏ. 5.2 வகை கொரொனா 2 பேருக்கும், பிஎப்7 வகை கொரொனா ஒருவருக்கும் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவிலிருந்து நேற்று மேற்குவங்க மாநிலத்திற்கு வந்த நான்கு பேருக்கு பிஎப்7 ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.